Saturday, November 13, 2010

சென்ற வார இடைத்தேர்தல் - குடலாப்பரேஷன்



சென்ற வாரம் இடைத்தேர்தலில் வாக்களிக்க நாங்கள் வரிசையில் நின்றபோதே முடிவு ஓரளவு தெரிந்து விட்டது.  அந்த வரிசையில் நாங்கள் இருவர் மட்டுமே பழுப்பு நிறத்தவர்.  பல வாக்குச்சாவடிகளில், அதிகாலையில் இருந்தே வயதான வெள்ளையர்கள் குவியத் தொடங்கி விட்டனர்.  ரிப்பப்ளிக்கன் கட்சியினரின் 'பயங்காட்டும்' பலமுனைப் பிரச்சாரம் நன்றாக வேலை செய்திருந்தது.  மாலையில் பிரதிநிதிகள் அவையில் பெரும்பாலான இடங்களை டெமாக்ரட் கட்சியினர் இழந்த செய்திகள் வரத்தொடங்கி விட்டன.  அவையின் உறுப்பினர்களுக்கும், விட்டுப்போன மற்றும் காலியான செனேட் இடங்களுக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல் வருவதால் இங்கு தேர்தல் நிதி திரட்டுவதும்,  பிரச்சாரம் செய்வதும் பல வடிவங்களில் வருடம் முழுதும் நடந்து கொண்டே இருக்கும்.  இதனால் ஊடகக் கூத்தாடிகளுக்கும், காத்தாடிகளுக்கும், கருத்துரைஞர்களுக்கும் எப்போதும் திருவிழாதான்.  போதாக்குறைக்கு அனைத்து ஊடகங்களிலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கருத்துக் கணிப்புகள் (திணிப்புகள்!).

Monday, November 1, 2010

நோய் நாடி நோய் முதல் நாடி

சமீபத்தில் பதிவர் விருட்சம் தனியார் பள்ளி நிர்வாகத்துடன் தாம் நடத்தும் போராட்டம் பற்றி எழுதியுள்ளார்.  அவர் கோரிக்கை நியாயமானதே.  அதற்கு பின்னூட்டமிட எழுதியபோது பதில் நீண்டு விட்டதால் அதனை அப்படியே தனிப் பதிவாக எழுதுகிறேன்.  தனியார் பள்ளிகளின் போக்கு அப்படியொன்றும் ஆச்சரியம் அளிப்பதாக இல்லை.  நினைவு தெரிந்த நாளாக அப்படித்தான் இருக்கிறார்கள்.  கல்வி வர்த்தகமாகிப் போனதால் பள்ளிகளும் demand - supply முறையில் இயங்குகின்றன.  Demand இருப்பதால் தரமான பொருளைத் தரவேண்டும் என்ற எண்ணம் இந்த வணிகர்களுக்கு வருவதில்லை.  கும்பகோணம் நிகழ்ச்சிக்குப் பிறகு எத்தனைப் பள்ளிகளில் கல்வித்துறை ஆய்வுகள் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

Wednesday, September 15, 2010

நானே நல்ல ஏய்ப்பன்

தலைப்பைப் பார்த்ததும், ஏதோ பைனான்ஸ் அல்லது சுவிசேஷ கம்பெனி பற்றிய மற்றொரு மொக்கை என்று நினைக்க வேண்டாம்.   இது இந்தப்பக்கம் அமெரிக்காவில் தினந்தினம் நடக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றிய பதிவு.  பொதுமக்கள் நடத்தும் ஜனநாயக முறைப் போராட்டங்கள் நடத்த அமெரிக்காவில் காரணங்கள் நிறைய உள்ளன.  முடிவில்லாத யுத்தங்கள், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், பங்குச்சந்தை சரிவு, ஒரே வாரத்தில் வீட்டையும் சொத்தையும் இழப்பது, பெரும் செல்வர்கள் மேலும் செல்வந்தர்களாவது, இப்படிப் பல.  ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக இங்கு எந்த மக்கள் போராட்டமும் நடப்பதில்லை.  ஒரு  கலப்பின ஆசாமி அமெரிக்க ஜனாதிபதியாக ஆனாலும் ஆனார், வாரம்தோறும் சனி ஞாயிறு வருகிறதோ இல்லையோ, நாட்டின் தலைநகர், மாநிலத் தலை நகர், இங்கெல்லாம் கோவக்கார வெள்ளைக்காரர்கள் தொடர்ந்து ஊர்வலங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.  நேரடியாக 'கறுப்பர் அதிபரானது பிடிக்கவில்லை' என்று சொல்ல முடியாது.  அதனால் லூசுத்தனமாக வேறு காரணங்களை முன்வைக்கின்றனர்.

Thursday, August 26, 2010

கபாலிக்கு வந்த காயிதங்கள்

நம்ம கபாலி அஞ்சாங்கிளாசத் தாண்டலன்னாலும் பிட் நோட்டீஸ் அடிச்சு விடுறதுல கிங்கரன். போன வாரம் ரெண்டாம் நம்பர் கடைக்குப் பக்கத்தில் ஒரே  கலாட்டா.  ஏதோ மட்டமான கலக்கலைக் குடிச்சிட்டுத் தன்னோட சிநேகிதன் கந்தசாமியிடம் கையை வீசி வீசிப் பேசிக் கொண்டிருக்கிறான். கைலி கிழிந்திருக்கிறது.  கிட்டே போய்ப் பார்க்கலாமா?
  "தபாரு கன்சாமி, இந்த கோவாலு என்னா ரொம்பப் பெரியவனா?  அல்லா ஊர்ல இருந்தும் அவனக் கூப்ட்டு, கூப்ட்டு விருந்து வக்கறானுங்க, பேச சொல்றாங்க, ப்ரைஸ் தர்றாங்க, படிச்சப் பசங்கல்லாம் அவம்பின்னாலப் போறாங்க, .. தாங்கலடா..." 

Saturday, July 31, 2010

சாதி கேட்டோ.... சாதி கேட்டோ....

புலம் பெயர்ந்த மகளிரின் சாதி ஆர்வம்

சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெமோவின் வலைத்தளத்தில் சாதியுடன் புழங்குதல் பற்றி விவாதங்கள் நிகழ்ந்தன.  அதில் பலர், பெண்கள் அவ்வளவாக சாதியைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.  என்னுடைய அனுமானத்தில் ஆண்களை விடப் பெண்களே, அதிலும் குறிப்பாக அமெரிக்க வாசி மாமிகள் மிக அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றனர்.  ஒரு விருந்தினர் வீட்டுக்குப் போனால், புதிதாக வந்தவரின் சாதி என்னவென்று அறிந்துகொள்ள விரும்புவார்கள்.  கொஞ்சம் நாசூக்கான பெண்கள், அருமையாகப் பேச்சுக் கொடுத்து விபரத்தை நம் வாயிலிருந்து பிடுங்கி விடுவார்கள். நான் பார்த்த சில சுவையான சம்பவங்கள் கீழே.

Monday, July 12, 2010

நிஜ 'உலக நாயகர்கள்'




கடந்த ஒரு மாதமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் நினைவையும் கனவையும் ஆக்கிரமித்திருந்த உலகக் கால் பந்துப் போட்டி நேற்று முடிந்தது.  யாருமே எதிர்பார்க்காத இரு அணிகள் இறுதிச் சுற்றில் மோதின.  நெதர்லாந்து அணியினரை எனக்கென்னவோ ஆரம்ப சுற்றுகளில் இருந்தே பிடிக்கவில்லை.  பௌல் (foul) செய்வதில் குறையே வைக்காமல்,  ஆடிய எல்லா ஆட்டங்களையும் நெதர்லாந்தினர் சுவாரஸ்யம் குறைந்ததாய் ஆக்கியிருந்தார்கள்.  இங்கு யு.எஸ் டீவீ சானல்களில் முடிந்தவரை உலகக் கோப்பைப் போட்டிகள் பற்றி எந்த சானலிலும் மூச்சு விடவில்லை. 

Monday, June 14, 2010

இதையா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்கிறோம்?




நேற்று மாலை என் மகளுடன் வீட்டின் அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றிருந்தேன்.  அங்கே மணலை அளைத்துக் கதை சொல்லி விளையாடுவது 'கிண்டர்கார்டன் பட்டதாரி'யான  அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.   நேற்று அப்படித்தான், மலையிலிருந்து ஆறு இழிந்து வந்துப் பின்னர் கடலில் கலப்பது போல் ஒரு கதை சொன்னாள். " கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது.  பிறகு மலையில் பொழிந்து அங்கிருந்து ஆறு உருவாகி, அது கல்லையும் கரைத்துக் கொண்டு வந்து கடலில் சேர்கிறது.  பிறகு அந்தக்கடலில் இருந்து நிறைய எண்ணெய் வந்து, ஆமை, பெலிக்கன், மீன் எல்லாவற்றுக்கும் எண்ணெய்க் குளியல் நடக்கிறது.  ஏனென்றால் வாரா வாரம் எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது நல்லது.."  அதை கேட்டதும் எனக்கு உடனே அதிர்ச்சியாகி விட்டது.  மெக்ஸிகோ குடாப்பகுதியில் இந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் செய்த அட்டூழியம் இப்படி ஒரு சாதாரண இயற்கைச் சுழற்சியையே மாற்றிக் குழந்தைகளின் கற்பனையையும் எதிர்காலத்தையும் பாதித்திருக்கிறது.  அழிவின் விளிம்பில் நிற்கும் கடல்சார் உயிரினங்கள்தான் எத்தனை?  போதாதற்கு, கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை சிதைக்க,  பூச்சி மருந்து போன்ற ஏதோ ஒரு ரசாயன நச்சுப் பொருளை ஏராளமான அளவில் கடலில் கொட்டியிருக்கிறார்கள்.  குறைந்த பட்சம் இந்த ஆண்டின் இறுதி வரைக்கும் கசிவை சரி செய்யா முடியாதாம். அவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது, காரணம் அரசாங்கமே அவர்கள் சட்டைப் பையில்.  நைஜீரியாவில் ஷெல் கார்ப்பரேஷன் செய்யும் கொடுமை அதைவிட அதிகம்.  இதற்கு மேல் ஒன்றும் எழுத முடியவில்லை.  நீங்களே செய்திகளைத் தேடித் படித்துக்கொள்ளுங்கள்.


Trackback:  எண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை?

Thursday, June 3, 2010

இன்னாது...... மன்னாப்பா..?

முன் குறிப்பு:  சமீபத்தில் 'காசேதான் கடவுளடா' பதினைந்தாவது முறை பார்த்த பாதிப்பில் சென்னையின் தேவபாஷையில் எழுதிப்பார்த்தது இது.  கட்டுரை யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. அப்படித் தோன்றினால் கம்பெனி பொறுப்பேற்காது.
 =======================
இதை தேங்காய் சீனிவாசன் சொல்வது மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்..

சோமாரி ....மாரியப்பன் என்ன அடிச்சிட்டாண்டா!  கட்சிக் கூட்டத்துக்குக் கூப்டுக்க்னு போயி மானத்த வாங்கிடாங்கடா.  மொதல்லயே ரெண்டு தபா கூட்டத்துக்குக் கூப்ட்டு, பிரியாணி, சரக்கு, துட்டு எதுமே தராமா எமாத்திப்புடானுங்க. மாரியக் கேட்டா,

Tuesday, May 18, 2010

பிரியத்துக்குரிய சாருவுக்கு...





எழுத்தாளர் சாரு அவர்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதையொட்டி சாருவுக்கு நான் எழுதும் திறந்த மடல்... 

=====================================





 ( இந்தக் கடிதத்தைப் பிரபல எழுத்தாளர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் என்னுடைய வலைப்பக்கத்திலேயே கவர் ஸ்டோரியாக மிகுந்த அவமானத்துடன் பதிவேற்றம் செய்கிறேன் )

அன்புள்ள சாரு...
அஸ்ஸலாமு அலைக்கும். (அ) ஜெய் சாய்ராம் (அ) எக்கிஸ்து சாமியார்  (அ) நித்தியானந்தம் .. விடுங்க சார், எனக்கும் குழப்பமா இருக்குது.

Sunday, May 16, 2010

நாளொன்றுக்குப் பத்து லட்சம் கேலன் எண்ணெய்...







கேத்தரினா சூறையாடிய லூசியானா மாகாணக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது BP எண்ணெய்க் கம்பெனியின் ஆழ்கடலில் எண்ணெய்த் தோண்டும் நிலையம்.  போன மாதம் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் அங்கே வரலாறு காணாத எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஒரு நாளில் சராசரியாக பத்து லட்சம் கேலன் எண்ணெய்,  கடலில் கலக்கிறது.  ஒரு மாதமாக

Tuesday, May 11, 2010

ஹம்மரும் தமிழ் சினிமா நாயகர்களும்

முதலில் ஒரு டிஸ்க்ளைமர்: இசையை ரசிப்பதில் நான் ஒரு ஞான சூன்யம் என்பதால்,   சினிமா பாடலில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது புரிந்தால்தான் கேட்பேன்.  அதனாலேயே இளையராஜாவுக்குப் பின்னர் வந்த எவரையும் ரசிக்க முடியவில்லை.
போன வாரம் ஒரு நண்பருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தேன்.   என் நண்பரோ, புரியுதோ இல்லையோ, தமிழ், இந்தி என்று கலந்து கட்டி,

Tuesday, May 4, 2010

'சுறாக் கடிக்கு மருந்து' (அ) 'கோடம்பாக்கத்துல இன்னுமா இதக் காப்பியடிக்கல ?'

ஓரிரு வாரங்களில் இங்கு ஆஸ்டின் நகரில் 'சுறா' திரையிடப்படலாம் என்றும், அப்படி வந்தால் போய்ப் பார்த்து விட்டு வரலாமா  என்றும் இரண்டு நாட்களுக்கு முன் என் சகதர்மினி கேட்டாள். ஏற்கனவே இணையத்தில் ஆளாளுக்கு சுறாவை அடித்துப் புட்டு வைத்திருப்பதைப் பார்க்கவில்லை போலும்.  என்னடா இது வம்பாகப் போகிறதே என்று, இன்னும் இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஆபீஸ் வேலை அதிகம் இருப்பதாகச் சொல்லி வைத்தேன்.  ஒருவேளை தன் தோழியரோடு போய்  அதைப் பார்த்து வரக்கூடும் என்ற ஆபத்தும் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று 'தங்கப்பதக்கம்' பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன்.  இந்த மாதிரி சூழ்நிலைகளை எதிர்கொள்ள கவியரசர் அப்போதே பாடிவிட்டார் பாருங்கள்.

Wednesday, April 21, 2010

பார்வதியம்மாவிடம் இருந்து பாரதத்தைக் காத்த பரமாத்மாக்கள்


போன வாரம் சென்னை விமான நிலையத்தில் தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயம் நடந்தது.  75 இராணுவத்தினரைக் கொன்ற நக்சல்கள் அங்கும் வந்து விட்டனரா?  இல்லை, அவர்கள் சுண்டைக்காய்கள். அதை விட மிக மிக ஆபத்தான பெண்மணி ஒருவர் இந்தியாவுக்குள் புக இருந்தார்.  வந்தவர் வெகு புத்திசாலித்தனமாக, ஒரு 78 வயதான, பல்வேறு நோய்களுடன் போராடும் பெண்மணி போல் வேஷம் போட்டு சக்கர நாற்காலியில்

Sunday, April 11, 2010

நித்தி கிறித்துவ மதத்தில் இணைப்பா?

போன மாதம் முழுதும் கால்ப் வீரர் டைகர் உட்சுடன் படுத்தப் பொன்னிறக் கூந்தல் அழகிகளின் பட்டியல் வளர வளர, அது நாள் வரை புத்தர் வேஷம் போட்ட டைகர் உட்சுக்கு எதிர்பாராத இடமாக, பாக்ஸ் (பொய்) நியூஸ் (fox News ) அறிவிப்பாளர் ஒருவரிடமிருந்து அறிவுரை வந்தது.  அதாவது, அவர் உடனே தன்னுடைய புத்த மதத்தை விட்டு, கிறித்துவ மதத்துக்கு வந்தால், அவர் எதிர்பார்ப்பதை விட அதிகம் பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்பதாகும். மார்க்கெட் சந்தர்ப்பத்தை எப்போதும் நழுவ விடாத பல சர்ச்சுகள் போட்டி போட்டுக் கொண்டு டைகருக்கு கவர்ச்சிகரமான ஆபர்கள் வழங்கின.  டைகர் தம் சர்ச்சுக்கு வந்தால் பாவமன்னிப்பு வழங்கத் தேவையான தொகையில் 50% வரைத் தள்ளுபடி

Saturday, March 27, 2010

செவ்வாயில் முளைத்த வெள்ளி

இந்த வாரம் யு.எஸ். அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி நடை பெற்றது.  டெமாக்ரட் கட்சியினர் ஜனாதிபதி பதவியைப் பிடித்த போதெல்லாம் பலமாக முயற்சி செய்து, ஒபாமா வந்த பின் ஓராண்டுக்கும் மேலாக ஆசியால் அரசியல் போராட்டம் நடை பெற்றது. ஒரு வழியாக 'சுகாதார சீர்திருத்த' சட்டம் செவ்வாய்க் கிழமை காலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டு, இந்த நாட்டின் சட்டமானது.  2008 அதிபர் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படியோ,

Saturday, January 23, 2010

ஒரு தேர்தலும், வேதாள உலகமும்


இந்த வாரத்தில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, செனேட் தேர்தலில் டெமாக்ரட் கட்சிக்குக் கிடைத்த அடி.
திரு ஒபாமா, தேர்தலின் பொது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூடச் செய்யவில்லை. எல்லாவற்றையும் வேக வேகமாக ஆரம்பித்து விட்டு, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட செனேட் மற்றும் பிரநிதிகள் அவையிடம் விட்டு விட்டார். அவர்களோ, பழம் தின்று, கொட்டையையும் தின்பவர்கள். 'உன்னால முடிஞ்சதப் பாத்துக்க' என்பது போல, தமது கார்ப்பரேட் முதலாளிகள் காட்டிய வழியில் ஒவ்வொரு சட்ட மசோதாவையும் முதலாளிகளுக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்து விட்டனர். மேடை ஏறி ஆறு போலப் பேசிய திரு ஒபாமா, தம்மை அதீத நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த மக்களிடம் அல்லவா சென்றிருக்க வேண்டும்? அவர் சொன்னால், அவருடன் சேர்ந்து போராடபெருவாரியான மக்களும் காத்திருந்தனர். அவரோ, வரலாறு தந்த அற்புதமான வாய்ப்புகளைக் கை கழுவி விட்டு, தன்னுடைய தவறான ஆலோசகர்கள் தந்த தவறான ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தார். தலை நகரில் நடக்கும் எந்த விதமான கேவலமான அரசியலை மாற்றுவேன் என்று சபதமிட்டு வந்தாரோ,

Monday, January 11, 2010

Book Reviews solicited

நீங்கள் படித்த, உங்களுக்குப் பிடித்த புத்தக விமர்சனங்கள் வரவேற்கப் படுகிறது. எனக்குப் பின்னூட்டத்தில் தெரிவித்தால், அவற்றை உங்கள்பெயரோடு கீழ்கண்ட வலைப் பதிவில் சேர்த்து விடுவேன்.

baski-reviews