Wednesday, April 21, 2010

பார்வதியம்மாவிடம் இருந்து பாரதத்தைக் காத்த பரமாத்மாக்கள்


போன வாரம் சென்னை விமான நிலையத்தில் தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயம் நடந்தது.  75 இராணுவத்தினரைக் கொன்ற நக்சல்கள் அங்கும் வந்து விட்டனரா?  இல்லை, அவர்கள் சுண்டைக்காய்கள். அதை விட மிக மிக ஆபத்தான பெண்மணி ஒருவர் இந்தியாவுக்குள் புக இருந்தார்.  வந்தவர் வெகு புத்திசாலித்தனமாக, ஒரு 78 வயதான, பல்வேறு நோய்களுடன் போராடும் பெண்மணி போல் வேஷம் போட்டு சக்கர நாற்காலியில்

Sunday, April 11, 2010

நித்தி கிறித்துவ மதத்தில் இணைப்பா?

போன மாதம் முழுதும் கால்ப் வீரர் டைகர் உட்சுடன் படுத்தப் பொன்னிறக் கூந்தல் அழகிகளின் பட்டியல் வளர வளர, அது நாள் வரை புத்தர் வேஷம் போட்ட டைகர் உட்சுக்கு எதிர்பாராத இடமாக, பாக்ஸ் (பொய்) நியூஸ் (fox News ) அறிவிப்பாளர் ஒருவரிடமிருந்து அறிவுரை வந்தது.  அதாவது, அவர் உடனே தன்னுடைய புத்த மதத்தை விட்டு, கிறித்துவ மதத்துக்கு வந்தால், அவர் எதிர்பார்ப்பதை விட அதிகம் பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்பதாகும். மார்க்கெட் சந்தர்ப்பத்தை எப்போதும் நழுவ விடாத பல சர்ச்சுகள் போட்டி போட்டுக் கொண்டு டைகருக்கு கவர்ச்சிகரமான ஆபர்கள் வழங்கின.  டைகர் தம் சர்ச்சுக்கு வந்தால் பாவமன்னிப்பு வழங்கத் தேவையான தொகையில் 50% வரைத் தள்ளுபடி