Tuesday, September 8, 2009

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் ....


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
-- கம்பராமாயண முதல் பாடல்


விளக்கம்:
எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும்,
அவற்றைக் காப்பதுவும், பின் அழிப்பதுவும் ஆகிய
அளவற்ற விளையாட்டுகள் புரியும் அவரே (கடவுள் ) எங்கள் தலைவர்.
அத்தன்மை வாய்த்த இறைவனிடமே நாங்கள் சரணாகதி அடைகிறோம்.

Monday, September 7, 2009

சாருவின் தமாஷ்



இவரே இணையத்தில்தான் எழுதிகிறார், ஆனால் இவர் இணைய எழுத்துகளை அவ்வளவாகப் படிப்பதில்லையாம். மேலும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரையறை இல்லாமல் மனம் போன போக்கில் எழுதுகிறார்களாம். மக்கா, மனசாட்சியே இல்லையா? சாரு தன்னுடைய 'சீரோ டிகிரி', 'ராசா லீலா' ஆகியவற்றை இந்த வகையில்தானே வரையறை இல்லாமல் மனம் போன போக்கில் எழுதிவிட்டு, இதுதான் பின் நவீனத்துவம் என்றும் பிலாக்கணம் செய்தார். இவருடைய இணையதளத்தில் ஜெயமோகனைத் திட்டி எழுதிய கடிதங்கள் 'ஹாட்' லிஸ்டில் எப்போதுமே இருக்கும். ஒரு மனிதனுக்கு இத்தனை வயிற்று எரிச்சலா?