Tuesday, May 18, 2010

பிரியத்துக்குரிய சாருவுக்கு...





எழுத்தாளர் சாரு அவர்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதையொட்டி சாருவுக்கு நான் எழுதும் திறந்த மடல்... 

=====================================





 ( இந்தக் கடிதத்தைப் பிரபல எழுத்தாளர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் என்னுடைய வலைப்பக்கத்திலேயே கவர் ஸ்டோரியாக மிகுந்த அவமானத்துடன் பதிவேற்றம் செய்கிறேன் )

அன்புள்ள சாரு...
அஸ்ஸலாமு அலைக்கும். (அ) ஜெய் சாய்ராம் (அ) எக்கிஸ்து சாமியார்  (அ) நித்தியானந்தம் .. விடுங்க சார், எனக்கும் குழப்பமா இருக்குது.

Sunday, May 16, 2010

நாளொன்றுக்குப் பத்து லட்சம் கேலன் எண்ணெய்...







கேத்தரினா சூறையாடிய லூசியானா மாகாணக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது BP எண்ணெய்க் கம்பெனியின் ஆழ்கடலில் எண்ணெய்த் தோண்டும் நிலையம்.  போன மாதம் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் அங்கே வரலாறு காணாத எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஒரு நாளில் சராசரியாக பத்து லட்சம் கேலன் எண்ணெய்,  கடலில் கலக்கிறது.  ஒரு மாதமாக

Tuesday, May 11, 2010

ஹம்மரும் தமிழ் சினிமா நாயகர்களும்

முதலில் ஒரு டிஸ்க்ளைமர்: இசையை ரசிப்பதில் நான் ஒரு ஞான சூன்யம் என்பதால்,   சினிமா பாடலில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது புரிந்தால்தான் கேட்பேன்.  அதனாலேயே இளையராஜாவுக்குப் பின்னர் வந்த எவரையும் ரசிக்க முடியவில்லை.
போன வாரம் ஒரு நண்பருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தேன்.   என் நண்பரோ, புரியுதோ இல்லையோ, தமிழ், இந்தி என்று கலந்து கட்டி,

Tuesday, May 4, 2010

'சுறாக் கடிக்கு மருந்து' (அ) 'கோடம்பாக்கத்துல இன்னுமா இதக் காப்பியடிக்கல ?'

ஓரிரு வாரங்களில் இங்கு ஆஸ்டின் நகரில் 'சுறா' திரையிடப்படலாம் என்றும், அப்படி வந்தால் போய்ப் பார்த்து விட்டு வரலாமா  என்றும் இரண்டு நாட்களுக்கு முன் என் சகதர்மினி கேட்டாள். ஏற்கனவே இணையத்தில் ஆளாளுக்கு சுறாவை அடித்துப் புட்டு வைத்திருப்பதைப் பார்க்கவில்லை போலும்.  என்னடா இது வம்பாகப் போகிறதே என்று, இன்னும் இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஆபீஸ் வேலை அதிகம் இருப்பதாகச் சொல்லி வைத்தேன்.  ஒருவேளை தன் தோழியரோடு போய்  அதைப் பார்த்து வரக்கூடும் என்ற ஆபத்தும் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று 'தங்கப்பதக்கம்' பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன்.  இந்த மாதிரி சூழ்நிலைகளை எதிர்கொள்ள கவியரசர் அப்போதே பாடிவிட்டார் பாருங்கள்.