Tuesday, May 21, 2019

யார் தந்தார் இந்த அரியாசனம் ?

பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். பெரிய முதலீடுகள் அங்கு குவிந்து முதல்வர் மோடிக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.  பத்திரிகைகளும் அவருக்கு ஒரு பெரிய இமேஜை உருவாக்கி வைத்தது.  சிலிக்கன் வேலி பணக்காரர்கள் வித்தியாசமானவர்கள்.  ஹோட்டல் சர்வருக்கான டிப்ஸை, ஐபோன் ஆப் உபயோகித்துப் பிரித்துக் கொள்வார்கள், ஆனால் இந்தியாவிலிருந்து ஏதாவது சாமியார் வந்தால் கணக்குப் பார்க்காமல் பணத்தை அள்ளி இறைப்பார்கள்.  மோடி ஒரு தீவிர இந்துக் காவலர் என்று அவர்களுடைய புத்தியில் ஏற்றப்பட்டது. குஜராத்தில் அவருடைய வீர சாகஸங்களைப் பார்த்தவர்கள், அவரை எப்படியும் மேலுக்கு கொண்டு வர தம்முடைய பங்கும் பெருமளவு  இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.