Sunday, April 12, 2020

சதிவலைகளும் புரளிகளும்

https://cdn.theatlantic.com/thumbor/muFAAWuH9hRuRsYo4YoFjbdX4No=/0x177:2000x1302/720x405/filters:format(png)/media/img/mt/2018/03/fakenews1-1/original.png
Conspiracy Theory: இயற்கையாகவோ அல்லது வேறு காரணத்தாலோ நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப்பின் "பெரும் சதிவலை" பின்னப்பட்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது.  உதாரணமாக , "9/11 ஒரு உள்ளடி வேலை",  "புல்வாமா தாக்குதல் இந்திய அரசின் சதி ", என்பது போல.   இந்த 'சதி-வலை' தியரிகள்  அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே உள்ளது.  இப்போதைய தொழில்நுட்பம் இதை ஒரு பெரும் அபாயகரமான, லாபகரமான தொழிலாகவே மாற்றி இருக்கிறது.  இடது-வலது பேதமில்லாத தொழில்.  இந்த சதிவலை-கதைகளை ஹார்வர்ட், IIT, MIT, ஸ்டான்போர்ட் போன்ற இடங்களில் பெரிய படிப்பு படித்தவர்களும் எப்படி நம்புகிறார்கள் ?   சில மாதங்களுக்கு முன்,  இந்தப் பொய்ச்செய்திகளுக்கு (fake news ) மக்கள் எப்படி விழுகிறார்கள் என்று 'சயன்டிபிக் அமெரிக்கா'   விரிவான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது .