Thursday, August 26, 2010

கபாலிக்கு வந்த காயிதங்கள்

நம்ம கபாலி அஞ்சாங்கிளாசத் தாண்டலன்னாலும் பிட் நோட்டீஸ் அடிச்சு விடுறதுல கிங்கரன். போன வாரம் ரெண்டாம் நம்பர் கடைக்குப் பக்கத்தில் ஒரே  கலாட்டா.  ஏதோ மட்டமான கலக்கலைக் குடிச்சிட்டுத் தன்னோட சிநேகிதன் கந்தசாமியிடம் கையை வீசி வீசிப் பேசிக் கொண்டிருக்கிறான். கைலி கிழிந்திருக்கிறது.  கிட்டே போய்ப் பார்க்கலாமா?
  "தபாரு கன்சாமி, இந்த கோவாலு என்னா ரொம்பப் பெரியவனா?  அல்லா ஊர்ல இருந்தும் அவனக் கூப்ட்டு, கூப்ட்டு விருந்து வக்கறானுங்க, பேச சொல்றாங்க, ப்ரைஸ் தர்றாங்க, படிச்சப் பசங்கல்லாம் அவம்பின்னாலப் போறாங்க, .. தாங்கலடா..."