Tuesday, March 20, 2012

கொடுத்த காசுக்கு மேல் கூவும் தினமலர்


Dr.உதயகுமார் ஒருங்கிணைப்பில் கூடங்குளம் போராட்டம் தொடங்கிய நாள் முதலாக தினமலர் நாளிதழைப் பார்த்தவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம்.   எவ்வளவு வீச்சுடன் பொய்ப் பிரச்சாரம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தனது முதல் பக்கத்தில் பொய் பிரச்சாரம் செய்து வந்தது.  அதற்குக் கருத்து சொல்ல அத்தனை அரை வேக்காடுகள்.  ஏறக்குறைய அரசாங்கத்தின் ஊது குழலை விட மோசமாகவே 'செய்தி'களை வெளியிட்டு வருகிறது.  போராடும் எளிய மக்களை 'கும்பல்' என்றும், 'கூலிகள்' என்றும்,  'எப்போது கைது' என்றும் நாள் தவறாது சிறப்பு செய்திகள்.  தம் எதிர்காலத்துக்காகவும் சந்ததியினருக்காகவும் போராடும் மக்களைத் தீவிரவாதிகளை விடக் கேவலமாகச் சித்தரிப்பதை நடுநிலை மக்கள் எப்படி ஜீரணிக்க முடியும்.  செய்திகளை வெளியிடாமல் கருத்துகளையே செய்திகளாக வெளியிடும் தினமலருக்கும் நக்கீரனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ?  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தினகரன் நாளிதழ் ஒரு ரூபாய்க்குக் கொடுத்தபோதும், ஜெயேந்திரர் கைதின்போதும் தினமலர் வாசித்தவர்களுக்கு அதன் சாயம் தெரியும்.