Wednesday, June 3, 2009

நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3

GCE Salem Hostel BBB

GCE Salem Hostel Days 2


ஹாஸ்டல் தினங்கள் தொடர்கிறது...
என்னுடைய க்ளாஸ்மேட் பத்ரி ஹாஸ்டல் எதிரிலிருந்த பனைமரத்தடிக்கு அழைத்துச் சென்ற புண்ணியவான். பெரும்பாலான மெக்கானிகல் மக்களுக்கு அது ஒரு தீர்த்த யாத்திரை ஸ்தலம். நயம் சரக்கு. அந்த சுர் என்று ஏறும் அனுபவம் வேறு எதிலும் வரவில்லை. அந்தப் பரமானந்தத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்த மகான் பத்ரி வாழ்க! ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் மாலை குரூப் குரூப்-ஆக பாட்டும் சிரிப்புமாக மக்கள் மெஸ் பக்கம் வந்தால், பனைமரத்தடியான் நல்ல கல்லா கட்டியிருக்கிறார் என்று அர்த்தம். இன்னும் சில கோஷ்டி (BJM, DS ), காலையில் உற்சாகப் பானம்
சாப்பிட்டு விட்டு வகுப்பறை போன கதைஎல்லாம் உண்டு.

நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா

இப்போது பலர் திருமணம், குழந்தைகள் என்று ஆன பின் எல்லாவற்றையும் விட்டு விட்டதாகக் கேள்வி. திருந்துங்க, ஆனா ரொம்ப திருந்தாதீங்க.

என்னுடைய மூன்றாம் ஆண்டு ரூம் மேட் சேகர் அந்தக் காலத்தில் ஒரு அப்பாவி. அநியாயத்துக்கு சாந்த சொரூபி, பயந்த சுபாவம். உருவத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமே இல்லாத வேலூர் வள்ளலார். அவனை மிரட்டும் ஒல்லியான நபர்கள் ரவிசங்கர் , நமச்சிவாயம் ஆகியோரைப் பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கும். ரெண்டு பேருக்கும் மம்முட்டியின் கணேஷ் பிராண்ட் தான் பிரியம். இதில் நமச்சிவாயம் இலந்தைப் பழம் பாடலையே மேலும் பக்திப் பரவசமாக மாற்றிப் பாடியவர். நமசிவாயம் எங்கள் ரூமுக்குள் வரும்போதெல்லாம், ஏதோ தசாவதாரம் படம் பார்க்கக் கூப்பிட்டது போல சேகரின் முகம் வெளிறிப் போகும். ரவிசங்கர் அப்போதே படிப்பாளி.
ஒரு முறை வேலை நிமித்தம் வேலூர் சென்றபோது சேகர் என்னை வந்துப் பார்த்தான். உடனே எனக்கு அந்த ஹோட்டலில் பயங்கர மரியாதை. சேகர், வேலூரில் மிகப் பெரிய கோடிச்வரர் பெண்ணைக் கல்யாணம் செய்திருந்த விஷயம் அப்போதான் தெரிந்தது. அவர்கள் தொழுவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள். பிறகு நான் பெரியார் பஸ்ல ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

விடுதி கேம்பஸில் பலர் பல விதங்களில் வசீகரமானவர்களாக இருந்தனர். யாரையும் காயப்படுத்தாத ஜி.கே. கண்ணன், முக்கியமான கிரிக்கெட் பிளேயர். நாடகங்களில் சிவன் வேஷம், வினு சக்கரவர்த்திக்கு டூப் போட ஏற்ற ஆகிருதி. ஹாஸ்டல் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தவன். சினிமாவில் சேருவான் என்று நினைத்தேன், இப்போது சென்னையில் பிசினஸ் செய்வதாகக் கேள்வி. பலாப்பழத்து மேல் ஈக்கள் போல் ரவிராஜைச் சுற்றி எப்போதும் நண்பர்கள். சரமாரியான டைமிங் ஜோக்குகள். நெற்றியில் ஜோக் எழுதி ஓட்டியதைப் போல பார்த்ததுமே சிரிப்பு வரும். மிகவும் சுவாரஸ்யமான ஆள். இவனும் சினிமா துறைக்கு செல்வான் என்று நினைத்திருந்தேன். இப்போது ஓஹையோவில் வாசம். ரவிராஜ் குரூப்-ல இருந்த இன்னொரு ஆள் : " இந்த இது இதுன்றதுக்கு அந்த இது சரி வராது. வேற இத வெச்சி இதுன்னம். போன தடவ இது பண்ணாத லைட்டா இதுன்னா கூட போறும்".. இத இதுன்றது யார் தெரிகிறதா? என்னோட neighbor all-round sportsman நம்ம இளங்கோ தான். ennudaiya க்ளாசில் என்னுடைய பெஞ்ச்-மேட். என்னைப் பலமுறை மேடத்திடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வைத்ததற்கு நன்றி உடையவன் ஆவேன்.

மேற்கண்ட அலப்பறைக் கூட்டத்தில் வேறு முக்கியமான ஆள் நம்முடைய இம்சை அரசன், 'வைத்தி' விஜயராமச் சந்திரன். இந்த வைத்தியின் க்ளோன் பற்றி ஒரு பெரிய புத்தகமே போடலாம். எந்தக் கூட்டத்திலும் புகுந்து சேதாரம் இல்லாமல் வெளியே வரக்கூடிய ஆள். நாரதர் வேஷமா? உடனே புக பண்ணலாம். பேசி ஜெயிக்க முடியாது. எனக்கும் ரொம்ப தோஸ்த். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் வடிவேலுக்குப் போட்டியாக வந்திருக்கலாம். எல்லா வஸ்துக்களையும் தயங்காமல் பரிசோதனை செய்து பார்த்தவன். இப்படிப் பட்ட மகான் சென்னைக்குக் குடி பெயர்ந்ததால் ஸ்வாமி மலை தப்பித்தது. விஜயராமனின் சமீபத்திய புகைப்படம் பார்த்தேன். அதே கண்கள்!


இன்னும் வருவார்கள்.....

No comments:

Post a Comment