Monday, May 4, 2009

எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

Salem GCE days - Part 1


ரெண்டு நாளுக்கு முன்னால மதியம் ரொம்ப போரடிச்சிப் போய் நாமளும் ப்லாக பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன எழுதறதுன்னு யோசிச்சப்ப திடீர்னு பழைய claasmate சுந்தர் கிட்டருந்து ஒரு ஈமெயில். என்னடான்னு பாத்தா எங்க சேலம் காலேஜ் மக்கள் லிஸ்ட் சேக்க ஆரம்பிச்சிருக்கார். ஒவ்வொருத்தர் முகமா கண்ணு முன்னால வந்து போகுது. சுந்தர், ரொம்ப நன்றிப்பா . அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே.. பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.
ஷன்முகேச்வரன் : - திட்டினாலும் சிரித்துக்கொண்டே திட்டியவன். நம்பவே முடியவில்லை இவனது மறைவுச் செய்தி. Prof.கங்காதரின் ஆதர்ச மாணவன். KRP க்கே பிடித்த அதிசயப் பிறவி.
ஹாஸ்டலில் எங்கள் பலருக்கு ஆசிரியராக இருந்தவன். என்னைப்போல மர மண்டைகளுக்கும் பொறுமையாய் சொல்லித் தந்த ஆசான். எங்கள் தகுதி பாராமல் பாசமாய் பழகினாய்.
நேரங்காலம் பார்க்காமல் யார் அழைத்தாலும் சென்று விடுவாயே ஷன்முகேசா, அழைத்தது காலன் என்று தெரிந்துமா சென்றாய் ?

லெஸ்லி, வசந்தன் & co : தமிழ்வாணன் , சாண்டில்யன் படித்துக்கொண்டிருந்த எங்களை நல்ல எழுத்தாளர்களையும் நல்ல தமிழை சுவாசிக்கக் கற்றுத்தந்தவர்கள். . கொஞ்சம் பொறுமை (நமக்கு!) இருந்தால் பழக மிகவும் இனிமையானவர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் சகலசவுபாக்கியங்களையும் பெற்று வாழுங்கள்.

ஜாலி கோஷ்டி: பாட்டு (?) பாடிக்கொண்டே சமையல் (?) செய்யும் நிமலேந்திரன், வகை வகையாக விசில் அடிக்கும், சரளமாக ஜோக் அடிக்கும் ரவிராஜ், கொசுவையே திருப்பிக் கடிக்கும் விஜயராமச்சந்திரன், என்று நினைவில் இருந்து நீங்காத எத்தனைப்பேர். ஞாயிறு காலை தூர்தர்ஷன் ஹிந்தி ராமாயணத்தை on-the-fly மொழி பெயர்க்கும் இளமாறனுக்கு எத்தனை ரசிகர்கள். அனுமனும் ராவணனும் பேசும் டயலாக் சென்சார் இல்லாமல் இங்கு போட முடியாது.
சுந்தர், சீ.ஜே, அஷோக், கண்ணன், B.J முரளி கிருஷ்ணன் என்று இன்னொரு கோஷ்டி என்று நினைக்கிறேன். ஆடிட்டோரியத்தில் செய்த கலாட்டாக்கள் நினைவில் உள்ளதா BJ? அசராமல் பீலா விடும் ரவிகாந்த் இப்போது என்ன செய்கிறாய்? சிரிக்காமல் ஜோக் அடிக்கும் மனோகர், உனது டெக்ஸ் டைல்ஸ் பிசினெஸ் நலமா?

படிப்பு கோஷ்டி: லோகநாதன், முநாவர், கண்ணன் என்று படித்து முன்னே போனவர்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்?

எப்போதும் ஆல்-பாஸ் செய்யும் மகளிர் அணி நலமாகத்தானே இருக்கறீங்க ? மாலதிக்குக் காலேஜ் போகும் மகள் (அதுவும் tachometer பறக்க விடுதா?) இருப்பது ஆச்சர்யமா இருக்குது. நமக்கெல்லாம் அவ்வளவா வயசு ஆயிடுச்சி? என்னோட பொண்ணு இப்போதான் கிண்டர் கார்டன் போகப்போவுது. காலேஜ் வரை யோசிச்சா இப்பவே கண்ணைக் கட்டுதே !

என்னை இப்போ பாத்தாக்க யாரும் கண்டு பிடிக்க முடியாது. நிறைய வெயிட் போட்டுட்டேன், தலை வெளியேயும் காலி ஆயிடுச்சி. பக்கத்து தெருக்காரன் இளங்கோ இப்போதும் தினமும் டென்னிஸ் தவறுவதே இல்லை. அப்பப்போ அவங்கூட தாக சாந்தி செய்யறபோது எல்லார் பத்தியும் பேச்சு வரும். அடுத்த முறை ஊருக்கு வரும்போது முடிஞ்சவரை ஒரு சந்திப்பு வெச்சுக்கணும்.
அப்புறம் மறுபடியும் பாக்கலாம்.
.......................
மக்கள் லிஸ்ட் வளருது. ஒவ்வொருத்தரும் இத்தன பேருங்கள ஞாபகம் வச்சிக்கிறது ஆச்சர்யமாவே இல்ல. எல்லாரும் அப்படி பழகி இருக்காங்க.
..............
ஆதி இளங்கோ : காலேஜில எனக்கு ரொம்ப தோஸ்த். வன்முறைக் கவிஞன். அதாவது, எதிர்ல ஆளு வந்தா, பிடிச்சி மடக்கி, மிரட்டி ஒரு கவிதையும் தத்துவமும் சொல்லாமல் விடாத தத்துவக் கவி. ( திண்டுக்கல் சாரதி படத்தில் வரும் காக்கை கவிராயர் போல ).
கப்பல்ல உலகம் பூரா சுத்துனதா செவி வழி செய்தி. இப்ப எங்கப்பா இருக்கே?

ஞானசேகரன்: சாந்த சொரூபி. தானே பாடலை இயற்றி, இசை அமைத்து, அதைத் தானே கேட்கும் கலைஞன். வேலை தேடி அலையும்போது ஒருமுறை கடலூரில் பார்த்தேன். நல்ல வாசனையான மீன் குழம்பு சாப்பாடு கிடைத்தது. அதற்காகவாவது மறுபடியும் சந்திக்க வேண்டும்.

சுஜாதா: ஒருமுறை டீ.சி. மோட்டார் பற்றி கட்டுரை எழுதி, அதை பேரா. தனகோடி வகுப்பறையில் படித்துக்காட்டியது நினைவு இருக்கிறதா? அந்தக் காப்பி கோடி பெரும்.

சத்தியமூர்த்தி : மறக்கக் கூடிய முகமா? நமக்குள்ள ஒரு சின்ன கணக்கு இருக்குது. அப்புறம் தனியா பேசுவோம்.

புவனேஸ்வரன்: விவேகானந்தர் நம்ம காலேஜ்ல சேந்து, வெளிய போனப்ப ப்ரேமானந்தாவா போனதப் பாத்துருக்கீங்களா ? புவனேஸ்வரன் எங்க ஊரு விவேகானந்தர். பள்ளியிலும் என்னோட கிளாஸ் மேட். அவரைத் திருத்துன பெரும சேலத்தையே சேரும்.

... இன்னும் வருவார்கள். ..

1 comment:

Livelove said...
This comment has been removed by the author.

Post a Comment