Thursday, May 14, 2009

இவ்வருடப் பயணப் பதிவுகள் - 2009

இந்த வருடம் எந்க கம்பெனியில் எல்லாரையும் கட்டாய விடுப்பு எடுக்கச் சொன்னதால் சீசன் கெட்ட சீசன்ல ஊருக்குப் போக வேண்டியதாச்சு. கிளம்பி துபாய் வழியா போனோம்.
முதல் ஸ்டாப் துபாய்:
துபாய்ல மூணு நாள் வசந்த பவன் ஹோடெல்ல ஸ்டே. அப்படியே இந்தியாவுல இருக்க பீலிங்! தக்காளி... அங்கங்க எச்சி துப்பி வச்சிருக்கானுக! நடக்கறப்ப பாத்து நடக்காட்டி கால் வழியே கிருமி வந்துரும். இந்தியனுங்கள விட அங்க பாகிஸ்தான் காரனுங்க ரொம்ப துப்பரானுங்க. கிட்டப் போன அப்படி ஒரு கப்பு. சிங்கப்பூர்'லயும் இதே மாதிரி நம்ம ஜனங்க இருக்க எடம் எல்லாம் கவர்மென்ட் கண்டுக்காம இருக்குது. எனக்குத் தெரிஞ்சி இங்க நியூ ஜெர்சில குஜராத்திங்க கடைக்கு முன்னாடி சாக்கட ஓடுது!.நீங்கள்ளாம் திருந்தவேமாட்டீங்களாடா?
எங்க சொந்தக்காரத தம்பி ஒன்னு துபாய சுத்திக் காட்டுச்சு. பத்தடிக்கு பத்தடி ரூம்ல எட்டுப் பேரு. அங்கேயே சமையல். காலைல இருந்து நைட் வரைக்கும் வேலை. அங்கிருந்து ரொம்ப தூரத்துல வேல பாக்கிறவங்க வாரத்துக்கு ஒரு தடவ துபாய் சிட்டி வந்து வேண்டிய பொருள வாங்கிட்டு பஸ் ஏற (வடிவேலு அண்ணே, துபாய்ல நெசமாலுமே பஸ் ஸ்டாண்டு இருக்கு, துபாய் போற பஸ் அங்க நிக்குது!) நீண்ட லைன்ல நிக்கறாங்க. கண்ணெல்லாம் பஞ்சடஞ்சு பாக்கவே பாவமா இருக்கு. எப்படியும் வட்டிக்கு வாங்கி, காட்ட, வீட்ட வித்து புரோக்கர் மூலமா வந்திருப்பாங்க. சம்பளமும் அவ்வளவு சொல்லிக்கிற மாதிரி இல்ல. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத ஊர்ல இருக்கறவங்க சென்ட் அடிச்சி செலவழிக்கறாங்க. என்னத்தச் சொல்றது? இன்னொரு பக்கம் பளபளன்னு வெள்ளக்காரங்க துபாய். அது நமக்கு வாணாம்.

No comments:

Post a Comment