Conspiracy Theory: இயற்கையாகவோ அல்லது வேறு காரணத்தாலோ நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப்பின் "பெரும் சதிவலை" பின்னப்பட்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது. உதாரணமாக , "9/11 ஒரு உள்ளடி வேலை", "புல்வாமா தாக்குதல் இந்திய அரசின் சதி ", என்பது போல. இந்த 'சதி-வலை' தியரிகள் அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே உள்ளது. இப்போதைய தொழில்நுட்பம் இதை ஒரு பெரும் அபாயகரமான, லாபகரமான தொழிலாகவே மாற்றி இருக்கிறது. இடது-வலது பேதமில்லாத தொழில். இந்த சதிவலை-கதைகளை ஹார்வர்ட், IIT, MIT, ஸ்டான்போர்ட் போன்ற இடங்களில் பெரிய படிப்பு படித்தவர்களும் எப்படி நம்புகிறார்கள் ? சில மாதங்களுக்கு முன், இந்தப் பொய்ச்செய்திகளுக்கு (fake news ) மக்கள் எப்படி விழுகிறார்கள் என்று 'சயன்டிபிக் அமெரிக்கா' விரிவான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது .
Sunday, April 12, 2020
சதிவலைகளும் புரளிகளும்
Conspiracy Theory: இயற்கையாகவோ அல்லது வேறு காரணத்தாலோ நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப்பின் "பெரும் சதிவலை" பின்னப்பட்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது. உதாரணமாக , "9/11 ஒரு உள்ளடி வேலை", "புல்வாமா தாக்குதல் இந்திய அரசின் சதி ", என்பது போல. இந்த 'சதி-வலை' தியரிகள் அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே உள்ளது. இப்போதைய தொழில்நுட்பம் இதை ஒரு பெரும் அபாயகரமான, லாபகரமான தொழிலாகவே மாற்றி இருக்கிறது. இடது-வலது பேதமில்லாத தொழில். இந்த சதிவலை-கதைகளை ஹார்வர்ட், IIT, MIT, ஸ்டான்போர்ட் போன்ற இடங்களில் பெரிய படிப்பு படித்தவர்களும் எப்படி நம்புகிறார்கள் ? சில மாதங்களுக்கு முன், இந்தப் பொய்ச்செய்திகளுக்கு (fake news ) மக்கள் எப்படி விழுகிறார்கள் என்று 'சயன்டிபிக் அமெரிக்கா' விரிவான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது .
Tuesday, May 21, 2019
யார் தந்தார் இந்த அரியாசனம் ?
பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரத்தில் சிறந்தவர்கள்.
பெரிய முதலீடுகள் அங்கு குவிந்து முதல்வர் மோடிக்கு நல்ல பெயர் வாங்கித்
தந்தது. பத்திரிகைகளும் அவருக்கு ஒரு பெரிய இமேஜை உருவாக்கி வைத்தது.
சிலிக்கன் வேலி பணக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஹோட்டல் சர்வருக்கான
டிப்ஸை, ஐபோன் ஆப் உபயோகித்துப் பிரித்துக் கொள்வார்கள், ஆனால்
இந்தியாவிலிருந்து ஏதாவது சாமியார் வந்தால் கணக்குப் பார்க்காமல் பணத்தை
அள்ளி இறைப்பார்கள். மோடி ஒரு தீவிர இந்துக் காவலர் என்று அவர்களுடைய
புத்தியில் ஏற்றப்பட்டது. குஜராத்தில் அவருடைய வீர சாகஸங்களைப்
பார்த்தவர்கள், அவரை எப்படியும் மேலுக்கு கொண்டு வர தம்முடைய பங்கும்
பெருமளவு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
Saturday, April 6, 2019
யட்சப்ரஸ்னம்
காட்டில் நீர் கொண்டு வரச் சென்ற தம்பியர் நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.
பலவாறாக சிந்தித்தபடியாக குளத்தை அடைந்தான். அங்கு இறந்து கிடந்த நால்வரையும் கண்டான். வனவாசம் முடியும்
சமயத்தில் இப்படி ஒரு சோதனையா?
யார் இப்படி செய்திருப்பார்கள்? அருகில்
சென்று பார்த்தான். உடலில் காயம் ஏதுமில்லை. உறங்குபவர்கள் போல்
படுத்திருந்தனர்.
ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி
பொய்கையை கண்டான். தம்பிகளைப் பிறகு பார்க்கலாம், முதலில் தாக்கத்தை தணிக்கலாம்
என்று பொய்கையில் இறங்கினான்.
அப்போது ஒரு அசரீரி, "என் பேச்சைக் கேளாமல் உன் தம்பிகள்
தண்ணீர் பருகினார்கள். நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில்
தந்துவிட்டு பிறகு குடி. இது என் குளம்" என்றது.
தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான். அசரீரி வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தது.
Saturday, March 30, 2019
செய்திகளை முந்தித் தருவது
எத்தனை
வேலை இருந்தாலும் தினமும் எதிரெதிர் செய்தித் தாள்களை மொழிக்கு இரண்டு
வீதம் வேகமாகப் படித்து விடுவது வழக்கம். இதனால் ஏதும் பயனுண்டா என்று
கேட்டால் , நிச்சயம் இல்லை. யோசித்துப் பார்த்தால் நியூஸ் பேப்பர்
படிக்கும் இந்தப் பழக்கம் நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது
ஆரம்பித்தது. சென்னை சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டில் தங்கிப்
படித்துக் கொண்டிருந்தேன். அங்கிருக்கும் திரௌபதி அம்மன் கோயில்தான்
எங்களுக்கு விளையாடுமிடம்.
மாலையில்
யாரும் வரமாட்டார்கள். அதன் பக்கத்திலேயே என் பெரியப்பாக்களில் ஒருவர் ஒரு
சிறிய லென்டிங் லைப்ரரி நடத்தி வந்தார். சிகரெட் புகைப்பதற்கோ எதற்கோ
போவதற்காக என்னை தினமும் சிறிது நேரம் அந்த லைப்ரரியில் காவலுக்கு உட்கார
வைத்து விட்டுப் போவார். அப்போது அங்கிருக்கும் நியூஸ் பேப்பர் மற்றும்
காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பேன்.
Saturday, December 31, 2016
தமன்னாவும் தமிழ்நாடும்
Tuesday, October 25, 2016
எந்த நாளும் திருவிழா - பாகம் 3 (அல்லது ) 2016 - Are You Not Entertained ?
நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும்
இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல்
இது. முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும்
தேர்தல் இது. பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள்
பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள். மிகவும் முன்னேறிய நாட்டில்
இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது. சக்தி வாய்ந்த செனேட்டின்
உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள். அரசியல் அதிகாரம் என்பது
இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது. பரவலாகி வரும்
கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம்,
பொருளாதாரம், ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட
ஆரம்பித்துள்ளது.
Tuesday, June 28, 2016
எந்த நாளும் திருவிழா - பாகம் 2
சென்ற பகுதியில் முதல்நிலை வேட்பாளர் தேர்தல் முறையைப் பார்த்தோம். எளிமையாகத் தெரிந்தாலும் அது உள்ளபடியே மிகவும் குழப்பமான, அர்த்தமில்லாத
முறை. 1968 வாக்கில்தான் அந்த முறை வந்தது. வருடம் முழுதும் நடக்கும்
தேர்தலினால் டி.விக்களுக்கு எக்கச்சக்கமான விளம்பர வருமானம். ஒரு பரபரப்பை
ஏற்படுத்தி, அந்த சூடு தணியாமல் பார்த்துக்கொண்டால்தான் டி.விக்களுக்கு நல்ல வருமானம்.
இது போக, ரேடியோ, இன்டர்நெட் விளம்பரம்,சம்பளத்துக்கு வேலை செய்யும்
ஆலோசகர்கள், பயணச் செலவு, கூட்டத்திற்கான செலவு என்று பெரிய பட்ஜெட்
வேண்டும். ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சுமாராக 1 பில்லியன் டாலர் செலவழிக்க
வேண்டும். அதற்கு நிதி திரட்ட வேண்டும்.Tuesday, June 21, 2016
எந்த நாளும் திருவிழா - பாகம் 1
போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது, "என்னப்பா இது அநியாயமா இருக்கு.
நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு. எங்கெல்லாம் எப்பதான்
அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர். "சரி, இங்க எப்படி எலக்ஷன்
நடக்குது தெரியுமா?" என்றேன். "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.
அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய
மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு
பதிவேற்றம் செய்கிறேன்
Friday, May 20, 2016
மகேசன் தீர்ப்பு எனும் மாம்பழம்
ஐந்தாண்டுகளாக
பக்கவாதம் வந்து படுத்துக்கொண்டிருந்த அரசாங்கத்தையே மறுபடியும் மக்கள்
எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது, டாக்டரேட் செய்யக்கூடிய ஒரு சப்ஜெக்ட். வசூலைத் தவிர வேறு எந்த வகையிலும் செயல்பாடு இல்லை. சின்னச்சின்ன நியாயமான
போராட்டங்களைக் கூட போலிசை வைத்து அடக்குவது, பத்திரிக்கைகளுக்கு அவதூறு
வழக்குகள் மூலம் வாய்ப் பூட்டு போடுவது, எந்த அமைப்பையும் நம்பாமல், ஒய்வு
பெற்ற சில குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது,
என்று ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாக மாறியது.
Monday, March 28, 2016
மெட்ராஸ் ஷேத்ரே
Disclaimer: எழுத்தாளர் ஜெயமோகனின் நெல்லை ஜங்க்ஷன் கீதையை சென்னை எக்மோருக்கு மாற்றியுள்ளேன்...
"ஹல்லோ, துலுக்கானமா? கிண்டி கெஜாவ எக்மோர் டேசன்
கேட்டாண்ட ஸ்கெட்ச் போட்டுத் தூக்கறன்னு அட்வான்ஸ் வாங்கிக்னு 'கொக்கி
அர்ச்சுனனும்' 'கோனாரு கோவாலும்' போனானுங்க. இன்னாடா பண்றானுங்க
இவ்வ்வ்ளோ நேரம்?" என்று பேட்டை பழைய வஸ்தாது, 'நொள்ளக்கண்ணு கபாலி', தன்
மச்சானிடம் செல்போனில் கேட்டான்.
பழக்கப்பட்ட பெட்டிக்கடை
பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்:
"தோ, மாமு, நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன்
கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா. கோனாரு இப்ப
கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா. அப்ப கோவாலு
சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.Sunday, October 12, 2014
சுவரொட்டித் தமிழன், தினமணி, மற்றும் சில..
இன்ன இடத்தில்தான் ஒட்டுவது என்றில்லாமல், பசு மாட்டின் மீது ஓட்டுவது,
பெயர்ப்பலகையில் ஒட்டுவது என்பதெல்லாம் பரிணாம வளர்ச்சி, அல்லது அப்போது
அருந்திய டாஸ்மாக் சரக்கின் வீரியம் என்பதன் வெளிப்பாடே.
Tuesday, March 20, 2012
கொடுத்த காசுக்கு மேல் கூவும் தினமலர்
Dr.உதயகுமார் ஒருங்கிணைப்பில் கூடங்குளம் போராட்டம் தொடங்கிய நாள் முதலாக தினமலர் நாளிதழைப் பார்த்தவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம். எவ்வளவு வீச்சுடன் பொய்ப் பிரச்சாரம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தனது முதல் பக்கத்தில் பொய் பிரச்சாரம் செய்து வந்தது. அதற்குக் கருத்து சொல்ல அத்தனை அரை வேக்காடுகள். ஏறக்குறைய அரசாங்கத்தின் ஊது குழலை விட மோசமாகவே 'செய்தி'களை வெளியிட்டு வருகிறது. போராடும் எளிய மக்களை 'கும்பல்' என்றும், 'கூலிகள்' என்றும், 'எப்போது கைது' என்றும் நாள் தவறாது சிறப்பு செய்திகள். தம் எதிர்காலத்துக்காகவும் சந்ததியினருக்காகவும் போராடும் மக்களைத் தீவிரவாதிகளை விடக் கேவலமாகச் சித்தரிப்பதை நடுநிலை மக்கள் எப்படி ஜீரணிக்க முடியும். செய்திகளை வெளியிடாமல் கருத்துகளையே செய்திகளாக வெளியிடும் தினமலருக்கும் நக்கீரனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ? ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தினகரன் நாளிதழ் ஒரு ரூபாய்க்குக் கொடுத்தபோதும், ஜெயேந்திரர் கைதின்போதும் தினமலர் வாசித்தவர்களுக்கு அதன் சாயம் தெரியும்.
Subscribe to:
Posts (Atom)





