Showing posts with label திருநெல்வேலி. Show all posts
Showing posts with label திருநெல்வேலி. Show all posts

Thursday, May 14, 2009

இவ்வருடப் பயணப் பதிவுகள் - திருநெல்வேலி







அடுத்த
ஸ்டாப் : திருநெல்வேலி - இது என் மனைவியின் ஊர். .. இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். கேரளத்துக்குப் பக்கத்துல இருப்பதாலோ என்னவோ ஊர் படு சுத்தம். ஜனங்களும் ரொம்ப மரியாதைப் பட்டவங்களா இருக்காங்க. வெட்டுக் குத்துன்னு பேப்பர்ல பாக்கறதெல்லாம் தனிப்பட்டவங்களுக்கு இடையிலதான். மத்த ஊர் போக்கிரிங்க மாதிரி பொது மக்களுக்கு இடைஞ்சல் தர்றது இல்ல.
இந்த ஜில்லாவுலதான் தமிழ்க் கவிதையப் புரட்டிப் போட்ட பாரதியார், உரைநடை பிதாமகர்கள் புதுமைப்பித்தன், .ரா., நவீன சிந்தனையாளர் சுந்தர ராமசாமி, கரிசல் மண்ணின் தவப்புதல்வர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உள்ளிட்டவர்கள் பிறந்து வளர்ந்தார்கள்.
நெல்லையச்சுத்தி நிறைய பாக்க வேண்டிய இடங்கள். திருச்செந்தூர், அப்புறம் போற வழியில நவ திருப்பதின்னு ஆழ்வார்கள் அவதரிச்சு வாழ்ந்த ஊர்கள். அந்த ஒண்ணரை மணி நேரப் பயணம் ரொம்ப அற்புதமா இருக்கும். நெல்லை டவுனில் இருக்கும் நெல்லையப்பர் கோயில் ஒரு சிற்றூர் அளவுக்கு இருக்குது. அனால் உள்ளே அவ்வளவா மக்கள் இல்லை. கோயிலின் ஒரு வாசலுக்கு வெளியே திருநெல்வேலியின் பிரசித்திப் பெற்ற இருட்டுக்கடை அல்வா கிடைக்கும். மாலை எட்டு மணிக்குள் போனால் கிடைக்கும்.

இந்த முறை பாணதீர்த்தம் போனோம். அம்பாசமுத்திரம் போய்ட்டு அங்கிருந்து பாபநாசம் போகணும். பாபநாசம் முண்டந்துறைக்காட்டு உள்ளே போய் மலை ஏறனும். பிளாட் போடாத காடு. ரசீது கொடுக்காம டிக்கெட் பணம் வாங்கிக்கறாங்க. அத மறந்துட்டு மேல போனா, அற்புதமான இடம். ரெண்டு பெரிய அருவி. படகுல ஏறி இருவது நிமிஷத்துல அருவிக்குப் போகலாம். அங்க ஒரு நாடு வயதினர், 'இங்க குளிச்சா எந்த வியாதியும் அண்டாது' ன்னு இருமிக்கிட்டே சொன்னார். பாணதீர்த்ததுலதான் .வே.சு. அய்யர் தன் மகளைக்காப்பாத்த குதிச்சி, ரெண்டு பெரும் இறந்து போனதா படிச்சிருகேன். அந்த அருவிய ஒட்டி பிரமாதமான காரையார் அணை. யாராவது E.B. யில ஆளு தெரிஞ்சா, இன்னும் நல்லா சுத்திப் பாக்கலாம். எனக்கு யாரையும் தெரியாததால்
அவ்வளவா போட்டோ எடுக்கக் கூட விடல.
இன்னொரு முக்கியமான விஷயம்.. சாப்பாடு எதுவும் மலை மேல கிடைக்காது.
கீழ பாபனாசத்துலையே வாங்கிட்டுப் போயிடனும். இது தெரியாம நாங்க மேல போய், இருந்த நொறுக்குத்தீனிய வச்சி அட்ஜஸ்ட் பண்ணிட்டு, கீழ வந்ததும், கண்ணுல பட்ட முதல் ஓட்டல்ல நுழைஞ்சிட்டோம்.
'அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் அணிந்த கையாள்'
அப்படின்னு அவ்வையார் பாடிய மாதிரி அப்படி ஒரு பசி. தனக்கு சாப்பாடு போட்டவளின் முகத்தைக் கூட பாக்க நேரமில்லாம, அந்தக் கையைப் பார்த்ததும் உடனே சாப்பிடத் தொடங்கி விட்டாளாம். பாவம் அவங்களுக்கு அப்படி ஒரு பசி.