Showing posts with label கபாலி. Show all posts
Showing posts with label கபாலி. Show all posts

Tuesday, September 6, 2011

சேதம் - நாவல் - கபாலிக்குத் தபால்


ஒலகத்துலேயே பெரிய அறிவாளியான அண்ணாத்தை கபாலிக்கு, சிஸ்யன் துலுக்காணத்தோட தபால்.
வெசயம் இன்னான்னா, நேத்து நம்ம மஜீத் பாயோட பழைய பேப்பர் கடையில ஓரமா நின்னுக்குனு பலான பலான புஸ்தகத்தலாம் நைசா பொரட்டிப் பாத்துக்கனு இருக்க சொல்ல, ஒம்பேரு போட்டு, 'சேதம்' அப்டீன்னு அதுங்களுக்கு நடுவுல ஒரு புஸ்தகம்.  பாயாண்ட போயி, 'இன்ன பாய், நம்ம குருநாதரோட பொஸ்தகத்த ஞாபகமில்லாம பலான பொஸ்தகத்துக்கு நடுவுல மறந்து போயி வெச்சிட்டியே' அப்டீன்னு சொன்னேன். அதுக்கு பாயி, 'போடா பொறம்போக்கு.  கபாலி போட்ட 'சேதம்' பொஸ்தகத்த அங்க வெக்கறதக்குக் கூடக் கூச்சமா இருக்குதுடா' ன்றாரு.  இப்பதான் எல்லாமே நெனப்புக்கு வருது.

Thursday, August 26, 2010

கபாலிக்கு வந்த காயிதங்கள்

நம்ம கபாலி அஞ்சாங்கிளாசத் தாண்டலன்னாலும் பிட் நோட்டீஸ் அடிச்சு விடுறதுல கிங்கரன். போன வாரம் ரெண்டாம் நம்பர் கடைக்குப் பக்கத்தில் ஒரே  கலாட்டா.  ஏதோ மட்டமான கலக்கலைக் குடிச்சிட்டுத் தன்னோட சிநேகிதன் கந்தசாமியிடம் கையை வீசி வீசிப் பேசிக் கொண்டிருக்கிறான். கைலி கிழிந்திருக்கிறது.  கிட்டே போய்ப் பார்க்கலாமா?
  "தபாரு கன்சாமி, இந்த கோவாலு என்னா ரொம்பப் பெரியவனா?  அல்லா ஊர்ல இருந்தும் அவனக் கூப்ட்டு, கூப்ட்டு விருந்து வக்கறானுங்க, பேச சொல்றாங்க, ப்ரைஸ் தர்றாங்க, படிச்சப் பசங்கல்லாம் அவம்பின்னாலப் போறாங்க, .. தாங்கலடா..."