Tuesday, May 18, 2010

பிரியத்துக்குரிய சாருவுக்கு...





எழுத்தாளர் சாரு அவர்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். அதையொட்டி சாருவுக்கு நான் எழுதும் திறந்த மடல்... 

=====================================





 ( இந்தக் கடிதத்தைப் பிரபல எழுத்தாளர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதால் என்னுடைய வலைப்பக்கத்திலேயே கவர் ஸ்டோரியாக மிகுந்த அவமானத்துடன் பதிவேற்றம் செய்கிறேன் )

அன்புள்ள சாரு...
அஸ்ஸலாமு அலைக்கும். (அ) ஜெய் சாய்ராம் (அ) எக்கிஸ்து சாமியார்  (அ) நித்தியானந்தம் .. விடுங்க சார், எனக்கும் குழப்பமா இருக்குது.

Sunday, May 16, 2010

நாளொன்றுக்குப் பத்து லட்சம் கேலன் எண்ணெய்...







கேத்தரினா சூறையாடிய லூசியானா மாகாணக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது BP எண்ணெய்க் கம்பெனியின் ஆழ்கடலில் எண்ணெய்த் தோண்டும் நிலையம்.  போன மாதம் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் அங்கே வரலாறு காணாத எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, ஒரு நாளில் சராசரியாக பத்து லட்சம் கேலன் எண்ணெய்,  கடலில் கலக்கிறது.  ஒரு மாதமாக

Tuesday, May 11, 2010

ஹம்மரும் தமிழ் சினிமா நாயகர்களும்

முதலில் ஒரு டிஸ்க்ளைமர்: இசையை ரசிப்பதில் நான் ஒரு ஞான சூன்யம் என்பதால்,   சினிமா பாடலில் குறைந்தபட்சம் 50 சதவிகிதமாவது புரிந்தால்தான் கேட்பேன்.  அதனாலேயே இளையராஜாவுக்குப் பின்னர் வந்த எவரையும் ரசிக்க முடியவில்லை.
போன வாரம் ஒரு நண்பருடன் அவரது காரில் சென்று கொண்டிருந்தேன்.   என் நண்பரோ, புரியுதோ இல்லையோ, தமிழ், இந்தி என்று கலந்து கட்டி,

Tuesday, May 4, 2010

'சுறாக் கடிக்கு மருந்து' (அ) 'கோடம்பாக்கத்துல இன்னுமா இதக் காப்பியடிக்கல ?'

ஓரிரு வாரங்களில் இங்கு ஆஸ்டின் நகரில் 'சுறா' திரையிடப்படலாம் என்றும், அப்படி வந்தால் போய்ப் பார்த்து விட்டு வரலாமா  என்றும் இரண்டு நாட்களுக்கு முன் என் சகதர்மினி கேட்டாள். ஏற்கனவே இணையத்தில் ஆளாளுக்கு சுறாவை அடித்துப் புட்டு வைத்திருப்பதைப் பார்க்கவில்லை போலும்.  என்னடா இது வம்பாகப் போகிறதே என்று, இன்னும் இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஆபீஸ் வேலை அதிகம் இருப்பதாகச் சொல்லி வைத்தேன்.  ஒருவேளை தன் தோழியரோடு போய்  அதைப் பார்த்து வரக்கூடும் என்ற ஆபத்தும் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று 'தங்கப்பதக்கம்' பாடலை மனப்பாடம் செய்து கொண்டேன்.  இந்த மாதிரி சூழ்நிலைகளை எதிர்கொள்ள கவியரசர் அப்போதே பாடிவிட்டார் பாருங்கள்.

Wednesday, April 21, 2010

பார்வதியம்மாவிடம் இருந்து பாரதத்தைக் காத்த பரமாத்மாக்கள்


போன வாரம் சென்னை விமான நிலையத்தில் தேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விஷயம் நடந்தது.  75 இராணுவத்தினரைக் கொன்ற நக்சல்கள் அங்கும் வந்து விட்டனரா?  இல்லை, அவர்கள் சுண்டைக்காய்கள். அதை விட மிக மிக ஆபத்தான பெண்மணி ஒருவர் இந்தியாவுக்குள் புக இருந்தார்.  வந்தவர் வெகு புத்திசாலித்தனமாக, ஒரு 78 வயதான, பல்வேறு நோய்களுடன் போராடும் பெண்மணி போல் வேஷம் போட்டு சக்கர நாற்காலியில்

Sunday, April 11, 2010

நித்தி கிறித்துவ மதத்தில் இணைப்பா?

போன மாதம் முழுதும் கால்ப் வீரர் டைகர் உட்சுடன் படுத்தப் பொன்னிறக் கூந்தல் அழகிகளின் பட்டியல் வளர வளர, அது நாள் வரை புத்தர் வேஷம் போட்ட டைகர் உட்சுக்கு எதிர்பாராத இடமாக, பாக்ஸ் (பொய்) நியூஸ் (fox News ) அறிவிப்பாளர் ஒருவரிடமிருந்து அறிவுரை வந்தது.  அதாவது, அவர் உடனே தன்னுடைய புத்த மதத்தை விட்டு, கிறித்துவ மதத்துக்கு வந்தால், அவர் எதிர்பார்ப்பதை விட அதிகம் பாவ மன்னிப்புக் கிடைக்கும் என்பதாகும். மார்க்கெட் சந்தர்ப்பத்தை எப்போதும் நழுவ விடாத பல சர்ச்சுகள் போட்டி போட்டுக் கொண்டு டைகருக்கு கவர்ச்சிகரமான ஆபர்கள் வழங்கின.  டைகர் தம் சர்ச்சுக்கு வந்தால் பாவமன்னிப்பு வழங்கத் தேவையான தொகையில் 50% வரைத் தள்ளுபடி

Saturday, March 27, 2010

செவ்வாயில் முளைத்த வெள்ளி

இந்த வாரம் யு.எஸ். அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி நடை பெற்றது.  டெமாக்ரட் கட்சியினர் ஜனாதிபதி பதவியைப் பிடித்த போதெல்லாம் பலமாக முயற்சி செய்து, ஒபாமா வந்த பின் ஓராண்டுக்கும் மேலாக ஆசியால் அரசியல் போராட்டம் நடை பெற்றது. ஒரு வழியாக 'சுகாதார சீர்திருத்த' சட்டம் செவ்வாய்க் கிழமை காலையில் ஜனாதிபதி கையெழுத்திட்டு, இந்த நாட்டின் சட்டமானது.  2008 அதிபர் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படியோ,

Saturday, January 23, 2010

ஒரு தேர்தலும், வேதாள உலகமும்


இந்த வாரத்தில் முக்கியமான இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, செனேட் தேர்தலில் டெமாக்ரட் கட்சிக்குக் கிடைத்த அடி.
திரு ஒபாமா, தேர்தலின் பொது கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூடச் செய்யவில்லை. எல்லாவற்றையும் வேக வேகமாக ஆரம்பித்து விட்டு, சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட செனேட் மற்றும் பிரநிதிகள் அவையிடம் விட்டு விட்டார். அவர்களோ, பழம் தின்று, கொட்டையையும் தின்பவர்கள். 'உன்னால முடிஞ்சதப் பாத்துக்க' என்பது போல, தமது கார்ப்பரேட் முதலாளிகள் காட்டிய வழியில் ஒவ்வொரு சட்ட மசோதாவையும் முதலாளிகளுக்குச் சாதகமாக எழுத ஆரம்பித்து விட்டனர். மேடை ஏறி ஆறு போலப் பேசிய திரு ஒபாமா, தம்மை அதீத நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்த மக்களிடம் அல்லவா சென்றிருக்க வேண்டும்? அவர் சொன்னால், அவருடன் சேர்ந்து போராடபெருவாரியான மக்களும் காத்திருந்தனர். அவரோ, வரலாறு தந்த அற்புதமான வாய்ப்புகளைக் கை கழுவி விட்டு, தன்னுடைய தவறான ஆலோசகர்கள் தந்த தவறான ஆலோசனைகளுக்குச் செவி சாய்த்தார். தலை நகரில் நடக்கும் எந்த விதமான கேவலமான அரசியலை மாற்றுவேன் என்று சபதமிட்டு வந்தாரோ,

Monday, January 11, 2010

Book Reviews solicited

நீங்கள் படித்த, உங்களுக்குப் பிடித்த புத்தக விமர்சனங்கள் வரவேற்கப் படுகிறது. எனக்குப் பின்னூட்டத்தில் தெரிவித்தால், அவற்றை உங்கள்பெயரோடு கீழ்கண்ட வலைப் பதிவில் சேர்த்து விடுவேன்.

baski-reviews

Thursday, October 1, 2009

சமீபத்தில் மிகவும் ரசித்த க்ளிப்ஸ்

மனோகரா spoof. - தேங்காய் சீனிவாசன் காமெடி. படம் - கல்யாண ராமன்

ரொம்ம்ம்ப நாள் பொறுத்து ஒரு முதுகெலும்புள்ள டெமாக்ரட் பிரதிநிதி.


மருத்துவ சீர் திருத்தம் தற்போது அமெரிக்காவின் மிக முக்கியமான உள்நாட்டுக் கொள்கையாக விவாதிக்கப் பட்டு வருகிறது. அடிப்படை மருத்துவ வசதிக்குக் கூட வழியில்லாத, ஏறக்குறைய நாற்பது மில்லியன் அமெரிக்க மக்களுக்கு உதவுவதற்காகவும், மருத்துவ இன்சூரன்ஸ் கம்பெனிகளின் அரக்கப் பிடியில் சிக்கி வீடு வாசலை இழந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு கை கொடுக்கவும் ஒரு நல்ல திட்டத்தைக் கொடுக்குமாறு, ஒபாமா, சட்ட மன்றத்தைக் கேட்டிருக்கிறார். எதிர்க் கட்சியான பணக்கார வெள்ளையர்கள் அடங்கிய கன்சர்வேடிவ் ரிபப்ளிக்கன் செனேட்டர்கள் ஒட்டு மொத்தமாகவும், டெமாக்ரட் கட்சியில் இருக்கும் சில முதுகில் குத்தும் துரோகிகளும், தனியாருக்குப் போட்டியாக வரும் எந்த திட்டத்தையும் கொண்டு வர விடாமல் முட்டுக் கட்டைப் போட்ட வண்ணம் இருக்கிறார்கள். இவர்களைப் பின்னாலிருந்து இயக்கும் கார்ப்பரேஷன்களும், ஓயாமல் பொய்ப்பிரச்சாரம் செய்யும் fox news போன்ற ஊடகங்களும் பிரமிக்க வைக்கின்றன. இவர்கள் எப்போதுமே வரலாற்றின் தவறான பக்கத்திலேயே இருந்திருக்கிறார்கள்.

Tuesday, September 8, 2009

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் ....


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே
-- கம்பராமாயண முதல் பாடல்


விளக்கம்:
எண்ணற்ற உலகங்கள் அனைத்தையும் படைப்பதுவும்,
அவற்றைக் காப்பதுவும், பின் அழிப்பதுவும் ஆகிய
அளவற்ற விளையாட்டுகள் புரியும் அவரே (கடவுள் ) எங்கள் தலைவர்.
அத்தன்மை வாய்த்த இறைவனிடமே நாங்கள் சரணாகதி அடைகிறோம்.